பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி
புதுச்சேரி : வில்லியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை இறந்தது.
விழுப்புரம், பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது மனைவி கவுசல்யா, 27, மகள் திஷ்யா, 3; மகன் மிதுன்ராஜ், 2, ஆகியோரை பைக்கில் (டி.என்.32.ஏ.டி.7989) அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்தார்.
வி.மணவெளி பாலம் கீழே சென்றபோது, கோர்காடு அடுத்த தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த கார் (டி.என்.16சி.6707) பைக் மீது மோதியது. இதில் படு காயமடைந்த நான்கு பேரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். அதில் திஷ்யா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement