தங்கையிடம் அத்துமீறியவருக்கு 16 வயது அண்ணன் கத்திக்குத்து

நாமக்கல் : நாமக்கல் அருகே தங்கையிடம் அத்துமீறியவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வீரியப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர். திருமணமாகி, மனைவி, மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் நான்காண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றார். தாயுடன் ஜெகநாதன் வசிக்கிறார்.
இந்நிலையில், வீரியப்பம்பாளையம் காலனி பகுதியில், ஒரு சிறுமியிடம் ஜெகநாதன் தவறாக நடந்துள்ளார்.
இது குறித்து தன் 16 வயது அண்ணனிடம் சிறுமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி அங்கன்வாடி மையம் அருகே நின்றிருந்த ஜெகநாதனை, கத்தியால் சரமாரியாக குத்தி தலைமறைவானார்.
வழக்கு பதிந்த நாமக்கல் போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை நேற்று கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும்
-
நாகை மாவட்ட பெண் போலீஸ் தற்கொலை
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு