தவிக்கும் தென் மாவட்ட மக்கள்: தி.மு.க., மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்

சென்னை: ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் மாவட்ட மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் உறை கிணறுகள் வழியாக அல்லாமல் தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் மாவட்ட மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆற்றிலிருந்து நேரடியாகக் குடிநீர் பெறப்படுவது தற்காலிகமானது தான் எனவும் வாய்க்கு வந்ததைக் கூறி தங்கள் நிர்வாகத்தின் மீதுள்ள புகார்களை மூடி மறைக்க முயலும் தி.மு.க., அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அத்தகைய துயர விபத்திலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் அப்பாவி மக்களின் உயிரை இந்த ஆளும் அறிவாலய அரசு இப்படி அலட்சியப்படுத்துவது ஏன்? கோடை வெயில் பில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?
உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை பிறருக்கு வகுப்பெடுக்கும் ஸ்டாலினுக்கு, குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும் அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்பதும் தெரியாதா?
எனவே இது குறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும்
-
மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்
-
குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சி மகன் பலி; தாய், மகளுக்கு சிகிச்சை
-
தேசிய நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
-
மேலுார்-காரைக்குடி சாலைப்பணி மந்தம்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
-
குடிநீர் பிரச்னை, பள்ளமான ரோடுகள் சிரமத்தில் விருதுநகர் லெட்சுமி நகர் குடியிருப்போர்