நோய் தடுப்பு பணி

திண்டுக்கல் : கோடை மழையால் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க பெரியக்கோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாமரைப்பாடி, முள்ளிப்பாடி ஊராட்சிகளிலும் நோய் தடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement