புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், ஸ்தாபனம், கலசபூஜை நடந்தது.
பகல் 11:00 மணியளவில் சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை, உலக மக்கள் நலன்வேண்டி விேஷச திரவியாபிேஷகம் நடந்தது. பகல் 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.