கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கடலுார்: கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில் சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. பயிற்சி நிறைவு விழாவில் சர்வதேச வாலிபால் பயிற்சியாளர் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

விழாவில் கடலுார் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ராஜா, சி.கே.பள்ளி முதல்வர் சுதா, அனைத்து குடியிருப்போர் நலச்சங்க சிறப்பு தலைவர் மருதவாணணன், வரதராஜன் நகர் குடியிருப்போர் சங்க தலைவர் இளங்கோவன், மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் தலைவர் முரளிதாஸ், செயலாளர் சிவபால சங்கர், பொருளாளர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் சாந்தகுமார், ஹரிசாரதி, விக்னேஷ், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

விழாவில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற மாணவி கிரேஷ்மா, தமிழக அணியில் இடம்பிடித்து வெற்றி பெற்ற மாணவி கிருத்திக்ஷா, 14வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகள் கனிஷ்கா, ஹாசினி ஆகியோரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement