அழுகிய நிலையில் விடுதியில் சடலம்
புதுச்சேரி; தங்கும் விடுதியில் ஓவிய உதவியாளர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்தவர் அனுப்ராஜ், 37. இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் வெங்கட்டா நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, கடற்கரை சாலையில் ஓவியம் வரையும் வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன், இவரிடம் சென்னை கொளத்துாரை சேர்ந்த ஷர்மிள்குமார் 33, என்பவர் உதவியாளராக இருந்து வந்தார். ஷர்மிள்குமாரும், அனுப்ராஜூடன் தங்கி வந்தார்.
கடந்த 21ம் தேதி அனுப்ராஜ் கேரளா சென்றுவிட்டார். ஷர்மிள்குமார் மட்டும் அறையில் தனியாக இருந்து வந்தார். 27 ம் தேதி அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகத்தின் பேரில் விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, ஷர்மிள் குமார் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.