முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரிக்கு 'சீல்'

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் முறைகேடாக இயங்கிய கிராவல் குவாரியை சீல் வைக்க ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.


நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் கிராவல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு முறைகேடுகள் நடப்பதாக கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சி.என்.பாளையத்தில் விலங்கல்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குவாரியில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.


இதில், குவாரியின் பக்கத்து நிலத்திற்கும், குவாரிக்கும் இடையே அளவீடு கல் பதித்து வேலி அமைக்காதது. அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல் அதிகளவு கிராவ் எடுத்தது. அனுமதி வழங்கப்பட்ட ஊர்களுக்கு கிராவல் அனுப்பாமல்,அனுமதியில்லாத ஊர்களுக்கு அனுப்பியது. லாரிகளில் அளவுக்கு அதிகமாக கிராவல் ஏற்றி அனுப்பியது என, முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து ஆர்.டி.ஓ.,அபிநயா, குவாரிக்கு சீல் வைக்கவும், அனுமதியின்றி கிராவல் அள்ள பயன்படுத்திய ஹிட்டாச்சி, 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement