மூதாட்டியை தாக்கிய இருவர் கைது

பவானி: பவானி, வர்ணாபுரத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 75; இவர் தனது வீட்டை வாடகைக்கு விட போர்டு வைத்துள்ளார். இதைப்பார்த்த ஒரு தம்பதி, பாப்பாத்தியிடம் மூன்று தினங்களுக்கு முன், 1,000 ரூபாயை முன்பணமாக தந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீடு பார்க்க வந்த போது, வீட்டை வாடகைக்கு விட விருப்பமில்லை எனக்கூறி, 700 ரூபாயை தந்துள்ளார்.

பாக்கி, 3௦௦ ரூபாயை கேட்டு மூதாட்டியை தாக்கியுள்ளனர். பிறகு வீடு புகுந்து ஒரு பித்தளை அண்டாவை துாக்கி சென்றுவிட்டனர். பாப்பாத்தி புகாரின்படி பவானி போலீசார் விசாரித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த, சிவா, 35; குமாரபாளையம், குப்பாண்டபாளையம் கோமதி, 32, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement