கோடை விடுமுறை நிறைவு பள்ளிகளில் துாய்மை பணி தீவிரம்

திருவாலங்காடு:தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள் கல்வித்துறை சார்பில் நடந்து வருகிறது.

அதன்படி, திருவாலங்காடு வட்டாரத்தில், 94 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இது தவிர, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளன.

அனைத்து அரசு பள்ளிகளும், வரும் 2ம் தேதி திறக்க, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவதற்கு முன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், மாணவர்கள் பயன்படுத்தும் இடங்கள் தூய்மையாகவும், தயார் நிலையிலும் இருக்க வேண்டும்.

கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சரிபார்த்து துாய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், அப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Advertisement