முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடலுார் : பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு மேல் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement