தி.மு.க., மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார், விழுப்புரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் சரவணன், கருணாநிதி முன்னிலை வகித்தனர். மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து தொகுதி வாரியாக, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம், வரும் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து, தேர்தல் பணிகள் குறித்தும், ஜூன் 3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் மாநில ஆதிராவிடர் நலக்குழு இணை செயலர் புஷ்பராஜ், தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், கணேசன், செல்வமணி, சீனுசெல்வரங்கம், புஷ்பராஜ், பாஸ்கரன், ராஜா, சந்திரசேகர், நகர செயலாளர்கள் சர்க்கரை, வெற்றிவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், வாசன், நகர மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி பிரபு, ஜெயமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தினகரன், நகர இளைஞரணி மணிகண்டன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement