மழை காரணமாக ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவக்கம்



கரூர்: மழை காரணமாக, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆத்துப்பாளையம் அணைக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு, நேற்று தண்ணீர் வரத்து தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 80 கன அடியாக இருந்தது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 7.85 அடியாக இருந்தது.தண்ணீர் வரத்து தொடந்தால், அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து, பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Advertisement