சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
கரூர்: சின்னதாராபுரம், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, விரும்புபவர்கள் ஜூன், 6 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பயிற்சி நிறுவன முதல்வர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கரூர் மாயனுார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், சின்னதாராபுரம் அரசு மகளிர் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தில், 2025-26ம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை கடந்த, 26 முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதில், சேர விரும்பும் மாணவியர் வரும் ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். http//scert.tnschools.gov என்ற இணையதளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள், 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவியர், 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு பயிற்சி நிறுவனத்தை, 97892-90855 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி
-
காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்
-
நைஜீரியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து; விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
-
ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,