அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் த.வெ.க., கொண்டாட்டம்

ஆத்துார்: த.வெ.க., சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துாரில் நேற்று, சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர்,

அஞ்சலை அம்மாளின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில், அஞ்சலை அம்மாளின் பணி குறித்து பேசினர். மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement