ஒரு மாதம் மர்மம் விலகியது; ஈரானில் மாயமான இந்தியர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு

தெஹ்ரான்: கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
கடந்த மே மாதம் பஞ்சாபின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ்., நகர் ஆகிய இடங்களிலிருந்து ஈரானுக்கு இந்தியர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு மூன்று பேரும் காணாமல் போகினர். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியர்கள் 3 பேர் கடத்தப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பணம் கோரியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர். இதனால் ஈரானில் நீடித்த ஒரு மாதம் மர்மம் விலகியது.







மேலும்
-
உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க காங்., எதிர்ப்பு வர்த்தக காங்கிரஸ் எதிர்ப்பு
-
1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
-
கம்பிகள் திருட்டு: ஒருவர் கைது
-
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
-
கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி
-
மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த வேன் எரிந்தது