காய்கறி சாகுபடிக்கு நடவு பணி தீவிரம்

உடுமலை; தொடர் மழை பெய்து வருவதால், காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை உடுமலை வட்டார விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில், கிணற்று பாசனத்தை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தாண்டு துவக்கத்தில், போதிய மழை இல்லாததால், காய்கறி சாகுபடி பரப்பு குறைந்து, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது.
கடந்த வாரத்தில், உடுமலை வட்டாரத்தில், பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தக்காளி நாற்று நடவு அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.
மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றுகளை நடவு செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழை, செடிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை சீசனில், காய்கறி உற்பத்திக்கு தகுந்த சீதோஷ்ண நிலை இருக்கும். இந்த சீசனில் வழக்கத்தை விட, கூடுதல் பரப்பில், நடவு செய்ய வாய்ப்புள்ளது,' என்றனர்.
மேலும்
-
உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க காங்., எதிர்ப்பு வர்த்தக காங்கிரஸ் எதிர்ப்பு
-
1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
-
கம்பிகள் திருட்டு: ஒருவர் கைது
-
கிராம பகுதிகளில் நிறுத்திய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க ஆய்வு
-
கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி
-
மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த வேன் எரிந்தது