இந்தியா முழுவதும் 4,302 பேருக்கு கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் 4 பேரும், டில்லி, தமிழகம், குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், 276 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாஸ்க் அணியுங்கள்!
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. மத்திய அரசு கூறிய அறிவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம், என்றார்.


மேலும்
-
'தேர்தல் நெருங்குவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டும்' என்.ஆர். காங்., இளைஞரணி தலைவர் பேச்சு
-
பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா
-
வித்யா சமிக் ஷா கேந்திரா மையம்; அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு
-
கார் கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது
-
தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு முகாம்; ரூ.1.5 கோடி வரை அரசு மானிய கடனுதவி
-
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு