மனைவி, மகளை வெட்டியவர் கைது

விருத்தாசலம்; நடத்தையில் சந்தேகமடைந்து மனைவி மற்றும் மகளை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த எம்.பட்டியை சேர்ந்தவர் நாராயணன் மகன் கோவிந்தன், 50. கூலி தொழிலாளி. இவரது மனைவி கஸ்துாரி, 43, மகள் செவ்வந்தி, 23.

மனைவி மற்றும் மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த கோவிந்தன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோவிந்தன், வாழை இலை வெட்டும் கத்தியால் மனைவி மற்றும் மகளை சரமாரியாக வெட்டினார்.

அதில், கஸ்துாரிக்கு இடது கையிலும், செவ்வந்திக்கு வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.

Advertisement