11 பேர் உயிரை பலிவாங்கிய சம்பவம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்

பெங்களூரு; கர்நாடகாவில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார். முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்.
பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை பெங்களூரு வென்றதை தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெங்களூரு அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், அதிரடி நடவடிக்கையாக அம்மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., தலைவர் ஹேமந்த் நிம்பல்கர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதே போன்று முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் நீக்கப்பட்டுள்ளார். மாநில ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கும் அவர், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.






மேலும்
-
ஓடும் ரயிலில் மனைவியிடம் கொள்ளை; தடுத்த டாக்டர் கை துண்டானது
-
'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்' தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை
-
குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு
-
விஜய் ராஜா நிறுவனத்திற்கு விருது
-
அதிநவீன வசதியுடன் உருவாகும் பிரம்மாண்ட சிறை
-
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்