டில்லியில் துப்பாக்கிச்சூடு; 2 ரவுடிகள் காயம்

1

புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ரவுடிகள் காயமுற்றனர்.



தெற்கு டில்லி ஷே க் ஷாராய் என்ற பகுதியில் மோட்டார் சைக்களில் சென்ற 2 பேரை மறித்து போலீசார் சோதனை நடத்த முற்பட்டனர். இந்நேரத்தில் தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ரவுடிகள் காயமுற்றதாக தெரிகிறது.

2 பேரை பிடித்து போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தரப்பில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை. முழு விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement