பள்ளி அருகில் பார் பா.ஜ., கவுன்சிலர் எதிர்ப்பு
திருப்புவனம்,: திருப்புவனம் பேரூராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சங்கர் கணேஷ் வரவேற்றார். தீர்மானங்களை முதுநிலை எழுத்தர் நாகராஜன் வாசித்தார்.
திருப்புவனம் நகரில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மழை நீர்வடிகால் அமைத்தல்,பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய பா.ஜ., கவுன்சிலர் செல்வராஜ், வங்கி அருகில் தனியார் மதுபான பார் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. பாரின் ஒரு புறம் அரசு பெண்கள் பள்ளி, மறுபுறம் தனியார் பள்ளி நடுவே அமைகிறது.
வாரம்தோறும் செவ்வாய் கிழமை காய்கறி சந்தைக்கு 15 கிராம மக்கள் வந்து செல்வார்கள். நகரின் மையப்பகுதியில் மதுபான பார் அமைவதால் பல்வேறு பிரச்னை ஏற்படும். எனவே நகரின் நடுவே மதுபான பார் வருவதை தடுக்க வேண்டும், என்றார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் சேங்கைமாறன் தெரிவித்தார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை