பள்ளி அருகில் பார் பா.ஜ., கவுன்சிலர் எதிர்ப்பு

திருப்புவனம்,: திருப்புவனம் பேரூராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சங்கர் கணேஷ் வரவேற்றார். தீர்மானங்களை முதுநிலை எழுத்தர் நாகராஜன் வாசித்தார்.

திருப்புவனம் நகரில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மழை நீர்வடிகால் அமைத்தல்,பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய பா.ஜ., கவுன்சிலர் செல்வராஜ், வங்கி அருகில் தனியார் மதுபான பார் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. பாரின் ஒரு புறம் அரசு பெண்கள் பள்ளி, மறுபுறம் தனியார் பள்ளி நடுவே அமைகிறது.

வாரம்தோறும் செவ்வாய் கிழமை காய்கறி சந்தைக்கு 15 கிராம மக்கள் வந்து செல்வார்கள். நகரின் மையப்பகுதியில் மதுபான பார் அமைவதால் பல்வேறு பிரச்னை ஏற்படும். எனவே நகரின் நடுவே மதுபான பார் வருவதை தடுக்க வேண்டும், என்றார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் சேங்கைமாறன் தெரிவித்தார்.

Advertisement