தாக்கிய இருவர் கைது

வடமதுரை: செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி 29. இவரது இல்ல விழாவிற்கு வெளியூர்காரரின் ஒலிபெருக்கியை பயன்படுத்தினார்.

ஆத்திரமடைந்த அதே பகுதியில் ஒலிபெருக்கி வாடகை தொழில் செய்பவர்களான ராஜலிங்கம் 27, தர்மராசு 22, தவசி 19, ஆகியோர் கங்காதேவியிடம் தகராறு செய்து தாக்கினர். தர்மராஜ், தவசியை வடமதுரை போலீசார் கைது செய்தார். ராஜலிங்கத்தை தேடுகின்றனர்.

Advertisement