கல்லுாரி மாணவி மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் - பாண்டிச்செல்வி இவர்கள் இளைய மகள் காயத்ரி 19, ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து தற்போது விடுமுறையில் உள்ளார்.

நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றனர். வேலை முடித்து வீட்டில் பார்த்த போது மகளை காணவில்லை. தாய் பாண்டிச் செல்வி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement