ராணுவ வீரரை கத்தியால் குத்திய 7 பேர் கைது

கம்பம்: கம்பம் பைபாஸ் ரோட்டில் ராணுவ வீரரை கும்பல் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம் ஏகலூத்து ரோட்டில் வசிக்கும் சரவணக்குமார் 25, ராஜஸ்தானில் உள்ள இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு கம்பம் வந்தார். கடந்த 2 ம் தேதி டுவீலரில் வேலப்பர் கோயில் தெருவில் வந்த போது , புதுப்பட்டியை சேர்ந்த யாசர் அராபத் மகன் ரஹ்மான் டூவீலரில் வேகமாக வந்து ராணுவவீரர் மீது மோதியள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரஹ்மான் தன் நண்பர் சுந்தரை வரவழைத்து ராணுவ வீரரை தாக்கியுள்ளனர்.

சரவணக்குமார் புகாரின்பேரில் தெற்கு போலீசார் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஹ்மான் , அவரது நண்பர்கள் 6 பேர் ஜூன் 4 ல் மாலை கம்பம் பைபாஸ் ரோட்டில் டூவீலரில் சென்ற ராணுவ வீரர் சரவணக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கம்பம் ஊத்துக்காட்டை சேர்ந்த சுந்தர் 21, புதுப் பட்டியை சேர்த்த ரஹ்மான் 20, கம்பம் ராம்ஜி பிரபு 23, அஸ்லாம் தாஜ்தீன் 20 முஜ்ஜமில் 21, முகமது முக்சித் 21, அஜய் 22, ஆகியோரை கைது செய்தனர், கைது செய்யப்பட்டவர்கள் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்டில் ஆஜர் செய்யப்பட்டு,தேனி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement