பிற்படுத்தோர் நல விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்:பிற்படுத்தோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன.
நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 மற்றும் கல்லுாரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரி படிக்கும் மாணவ - -மாணவியர்,. இந்த விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் சேர விரும்பும் மாணவ- - மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகையாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், கல்வி பயிலும் இடத்திற்கும், 8 கி.மீ., மிகையாமல் இருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விடுதி காப்பாளர்களிடம் ஜூன்-18ம் தேதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை- 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இலங்கை தமிழர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்