மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம்

தேனி: தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கத்தில் பகலிரவு போட்டிகள் நேற்று துவங்கியது. நாக் அவுட்'முறையிலான முதல் போட்டியை எல்.எஸ்., மில்ஸ் இயக்குனர்கள் சிந்தியா, ஐஸ்வர்யா துவக்கி வைத்தனர். முதல் போட்டியில் வடுகப்பட்டி டாக்டர் ஜி.எஸ்., அகாடமி அணியும், கம்பம் பள்ளத்தாக்கு கூடைப்பந்து கிளப் அணியும் மோதின. இதில் 53:69 என்ற புள்ளிக்கணக்கில் கம்பம் பள்ளத்தாக்கு அணி வெற்றி பெற்றது.
ஜி.எஸ்., அகாடமி அணி வீரர் ரிஷி 18 புள்ளிகள் பெற்றார். இரண்டாவது போட்டியை பாலசங்கா நிர்வாக இயக்குனர் செந்தில்நாராயணன், தேனி நகராட்சியின் துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தனர்.
இதில் தேனி டவுன் டீம் அகாடமி அணியும், போடி ஹூப் ஸ்டார் அகாடமி அணியும் மோதின. இதில் 69: 102 புள்ளிக்கணக்கில் போடி அணி வெற்றி பெற்றது. தேனி டவுன் டீம் அகாடமி அணியின் வீரர் தாணு அதிகபட்சமாக 37 புள்ளிகள் பெற்றார். மூன்றாவது போட்டியை சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர் துவக்கி வைத்தார்.
இதில் வடுகப்பட்டி கூடைப்பந்து அணியும், வடுகப்பட்டி பேராசிரியர் ஜெயந்த் நினைவு கூடைப்பந்து அணியும் மோதின. இதில் 101:66 என்ற புள்ளிக்கணக்கில் வடுகப்பட்டி கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது. இதில் வடுகப்பட்டி கூடைப்பந்து அணி வீரர் விக்னேஷ் 47, புள்ளிகள் பெற்றார். பேராசிரியர் ஜெயந்த் நினைவு கூடைப்பந்து அணி வீரர் தருண் 20 புள்ளிகள் பெற்றார். இன்று லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும்
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு