இன்ஜினியரிங் சேர்க்கை விண்ணப்ப பதிவு நிறைவு
சென்னை:தமிழகத்தில், கடந்த மாதம் 7ம் தேதி துவங்கிய இன்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு முடிந்தது.
இதில் நேற்று மதியம் 1:00 மணி வரை, 1 லட்சத்து 10,363 மாணவியர்; 1 லட்சத்து 33,805 மாணவர்கள் என, மொத்தம் 2 லட்சத்து 98,425 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.
அவர்களில், 2 லட்சத்து 44,168 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள், அவர்களின் சான்றிதழ்களை, வரும் 9ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதே சமயம், பி.ஆர்க்., படிப்பிற்கான, 'நேட்டா' நுழைவுத்தேர்வு, இம்மாதம் கடைசி வாரத்தில் நடக்க உள்ள நிலையில், வரும் 30ம் தேதி வரை, பி.ஆர்க்., படிப்புக்கான இணையதள விண்ணப்ப பதிவு செய்து, சான்றிதழ்களை பதிவேற்றலாம்.
அதேபோல், பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியான பின், இன்ஜினியரிங் துணை கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி, வரும் 13ம் தேதியுடன் முடியும்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை