1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்
ஓசூர், தமிழகத்தில் ஈஷா சார்பில், 1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து துவங்கியது.
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், கடந்த நிதியாண்டில், விவசாயிகள் மூலம் அவர்களது நிலங்களில், 1.36 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மட்டும் நடப்பாண்டு, 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியாக, 'பசுமை கிருஷ்ணகிரி' திட்டமும் துவங்கப்பட்டது.
காவேரி கூக்குரல் மற்றும் ஓசூர் நகர தன்னார்வலர்கள் இணைந்து, வரும் ஆண்டுகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு கோடி மரங்கள் நட உள்ளனர். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மட்டும், 10 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, திரைப்பட நடிகர் கிட்டி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், முன்னாள் வனத்துறை அதிகாரி சுகதோ தத் ஆகியோர், மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தனர்.
காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில விவசாய நிலங்களில். 242 கோடி மரங்களை நட திட்டமிட்டு செயல்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் இலக்குகள் நிர்ணயம் செய்து, மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்தாண்டு, 1.21 கோடி மரக்கன்றுகள், விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளதாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு