விவசாயிகள் பெயரில் வண்டல் மண் திருட்டு: கண்காணிக்க எதிர்பார்ப்பு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பெயரில் மண் அள்ளும் திருட்டு நடக்காமல் இருக்க மண் அள்ளுவதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மாவட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏரி ,குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன.
மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏரி, குளம், கண்மாய்களில் வண்டல் மண், களிமண் எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ராஜபாளையம் பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கு அனுமதி பெற்று விவசாயிகள் பெயரில் செங்கல் சூளைகளுக்கும் பிற பணிகளுக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து முறைகேடாக மண் அள்ளப்பட்டது.
தற்போது வண்டல் மண் அள்ளுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள கண்மாய்களில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள பயனாளிகள் பயன்பெறும் வகையில் கண்காணிப்பதோடு, அனுமதிக்கப்பட்டஅளவு மட்டும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு அள்ளப்படுகிறதா என்பதையும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
தவறுகள் நடைபெறுவது குறித்து குற்றச்சாட்டுகள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை