மகன் சாவில் சந்தேகம் போலீசாரிடம் தாய் மனு
ஏற்காடு, ஏற்காடு கும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுப்ரமணி, 38. இவர், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாய் புஷ்பராணிக்கு, சுப்ரமணி மனைவி சந்திரபாபு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற புஷ்பராணி, சுப்ரமணி உடலை பார்த்த பின், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தனது மகன் சுப்ரமணியின் மனைவி சந்திராபாபுவுக்கும், ஏற்காட்டில் உள்ள மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஊர் பெரியவர்களை வைத்து கண்டித்து பேசி முடித்து வைக்கப்பட்டது. பின்னர் மகன், சந்திராபாபு சேர்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்று சந்திராபாபு கூறுகிறார். எனவே என் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஏற்காடு போலீசார் சுப்பிரமணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்