ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி ரூ.33.34 லட்சம் மோசடி * சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
சிவகங்கை:ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவகங்கையை சேர்ந்த 4 பேரிடம் ரூ.33 லட்சத்து 34 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 37 வயது நபர் ‛பேஸ்புக்கில்' வந்த லிங்கை அழுத்தியுள்ளார். இவரது அலைபேசிக்கு பேசிய நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி 2025 ஏப்., 9 முதல் 16 ம் தேதிக்குள் 9 வங்கி கணக்குகளில் 22 முறை ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்து 800 வரை செலுத்தினார்.
தவணை காலம் முடிந்தும் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளனர்.
அது போன்று 76 வயது முதியவரிடம் 2025 ஜன., 5 முதல் 9 ம் தேதிக்குள் வங்கி கணக்கில் ஒரே முறையாக ரூ.5.92 லட்சம் கட்டியுள்ளார். அவரிடம் பெற்ற பணத்தையும் மோசடி செய்துள்ளனர். 2025 ஏப்., 12 முதல் 25 ம் தேதி வரை 24 வயது நபரிடம் ஆன்லைனில் 11 வங்கி கணக்குகளில் 13 முறை ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்து 500 வரை பெற்று மோசடி செய்துள்ளனர்.
2024 டிச., 18 முதல் 2025 ஜன., 7 ம் தேதி வரை 40 வயது நபரிடம் 3 வங்கி கணக்கில் 3 முறை ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 500 பெற்றுள்ளனர். அதில், ரூ.2.09 லட்சத்தை திரும்ப பெற்று விட்டார். எஞ்சிய தொகையை தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து நான்கு பேரும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, மாவட்ட அளவில் 4 பேரிடம் ரூ.33 லட்சத்து 34 ஆயிரத்து 64 வரை மோசடி செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்