புகார்பெட்டி கள்ளக்குறிச்சி

மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்



கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலம் காட்டுகொட்டாய் பகுதியில் தெரு மின்விளக்குகள் இல்லாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

-தயஸ்ரீ, அணைகரைக்கோட்டாலம்.

குண்டும் குழியுமான சாலைகள்



வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் இருந்து பொற்பாலம்பட்டு வழியாக பெரியபகண்டை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

-நடேசன், எகால்.

புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?



வாணாபுரம் அடுத்த அய்யனார்பாளையம் கிராமத்தில், பழுதடைந்த பஸ் நிழற்குடை கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னசாமி, அய்யனார்பாளையம்.

Advertisement