நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி : நன்கொடை வழங்க அழைப்பு
கள்ளக்குறிச்சி : நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் பள்ளி மேம்பாடு மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கி உதவ கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லுாரிகளில் சேர உதவிட விரும்புவோர், 'நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம்.
இதற்காக தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் https://nammaschool.tnschools.gov.in/#/ இணையதளம் மற்றும் தனி வங்கி கணக்கு துவங்கியுள்ளது.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் நிதி வழங்கி பங்களிக்கலாம். இணையதளம் வழியாக பெறப்படும் நிதி, பள்ளிகளுக்கு தேவையான செலவினம் மேற்கொள்ளப்படும். நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதி உதவிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும், வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் விரும்பும் பள்ளியை இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து வழங்கலாம்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லுாரிகளில் சேர உதவிட விரும்புவோர் உயர் கல்விக்கு சமூக பங்களிப்பு என்பதை தேர்ந்தெடுத்து உதவலாம். அம்மாணவர்கள் சார்ந்த விவரங்களுக்கு 9122309830 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்