வளர்ப்பு நாய் இறந்த சோகம் விவசாயி தற்கொலை

தென்காசி:சங்கரன்கோவில் அருகே வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் 40, விவசாயி. இவர்
வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். எப்போதும் அவருடனேயே இருக்கும். தோட்டத்திற்குள் உடன் சென்று வரும். இந்த நாய் உடல் நலம் பாதித்து திடீரென இறந்துவிட்டது. அதில் இருந்து பெருமாள் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement