ஏரியில் கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், ஏரியில் நுாற்றுக்கணக்கான கருவேல மரங்கள் வளர்ந்து காடாக மாறியுள்ளது. இவை ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை வேகமாக உறிஞ்சி, நிலத்தடி நீர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன.
ஏரியில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நீர்வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பனப்பாக்கம் ஏரி பாசன சங்க தலைவர் பி.ஜி.கணபதி கூறியதாவது:
ஏரிக்கு வரத்து கால்வாய் வழியாக குறைந்தளவே தண்ணீர் வந்தடைகிறது. அந்த தண்ணீரும் கருவேல மரங்களால் வேகமாக உறிஞ்சப்பட்டு வறண்டு விடுகிறது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கருவேல மரங்களை அகற்றினால், கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வாய்ப்புள்ளது. தற்போது, தண்ணீர் இல்லாததால், அப்பணிகளை செய்வது எளிதாக செய்ய முடியும். மழைக்காலம் துவங்கிவிட்டால் கடினமாக மாறிவிடும்.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன், ஏரியை சூழந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்