சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் சவுக்குதோப்பு வழியாக இறுதி ஊர்வலம்

திண்டிவனம்:திண்டிவனம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், சவுக்கு தோப்பு வழியாக இறந்தவர் உடலை துாக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் சொந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்கள் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி செய்துதரக்கோரி, திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி மனுக்களை கொடுத்தனர். கடந்த மாதம் 5ம் தேதி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு, ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வடிவேல், 60; உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். நேற்று காலை 11:00 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. சுடுகாட்டிற்கு வழி இல்லாததால், அவரது உடல் சவுக்கு தோப்பு, ஏரி வாய்க்கால் வழியாக சுமார் 2 கி.மீ., துாரம் கடந்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மா.கம்யூ., வட்ட செயலாளர் கண்ணதாசன் கூறுகையில்; ஏப்பாக்கத்திற்கு சாலை வசதி செய்துதர சப்கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. வருங்காலத்தில் யாராவது அந்தப்பகுதியில் இறந்தால், அவர்களை உடலை போட்டு போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று தெரிவித்தார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை