கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:50 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

Advertisement