கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கடலுார்: கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.
அவரது செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி மையங்களில் மொபைல் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கரவாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் கட்டணமின்றி 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற இயக்குநர், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 68, சங்கர நாயுடு தெரு, தானம் நகர், திருப்பாதிரிப்புலியூர், கடலுார்- 607002 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை