ஆட்டோ கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி: 3 பேர் காயம்
விழுப்புரம் : காணை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கண்டாச்சிபுரம் அருகே ஒட்டன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆபேல். இவரது மனைவி கன்னிமேரி, 65; உறவினர் பாத்திமாமேரி, 43; ஆகியோர் நேற்று முன்தினம் ஆட்டோவில் அரியலுாரில் இருந்து தங்களின் வீட்டிற்கு சென்றனர்.
ஆட்டோவை ஒதியத்துார் கிராமத்தை சேர்ந்த லியோ வலனரசு, 55; ஓட்டினார். காணை அருகே கோழிபட்டு கிராமத்தில் சென்ற போது ஆட்டோ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கன்னிமேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த ஆபேல், பாத்திமாமேரி உட்பட 3 பேர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement