வரலாற்று நிகழ்வு தினம்
மதுரை : தென்னாப்பிரிக்காவில் பீட்டர் மாரிட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தில் நிற வேற்றுமை காரணமாக ரயிலின் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து காந்தி இறக்கி விடப்பட்ட வரலாற்று நிகழ்வின் 132வது ஆண்டு தினம் சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார். தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். நிறவெறிக்கு எதிராக காந்தியின் அகிம்சை போராட்டம் குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், காந்தியின் தென்னாப்பிரிக்கா பயணம் குறித்து கல்வி அலுவலர் நடராஜன் விவரித்தனர்.
ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில்,'தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட காந்தி அகிம்சை, சத்தியாகிரக போராட்டம் மூலம் அதற்கு தீர்வு கண்டார்'' என்றார். ஆசிரியை அனுஷ்யா ஜெரிஸ்லின் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement