குன்றத்தில் 5 உப கோயில்களில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 5 உப கோயில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணி நடக்கிறது. முதல் கட்டமாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் அறங்காவலர் குழுவினர் செலவில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது.

இரண்டாம் கட்டமாக மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயில், சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் சுவாமி கோயில், மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில், படிக்கட்டு விநாயகர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.

Advertisement