லெவல் கிராசிங் விழிப்புணர்வு

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் உலக ரயில் கடவுப்பாதை (லெவல் கிராசிங்) தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி மதுரை -- திருச்சி இடையே பிரசார வாகன பயணம் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா துவக்கி வைத்தார். கூடுதல் மேலாளர் ராவ், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, உதவி பாதுகாப்பு அதிகாரி சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement