குரு பூஜை விழா

மதுரை: மதுரை மகாளிப்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் சுமை துாக்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேவர் குரு பூஜை விழா நடந்தது.

நிர்வாகிகள் பொங்கலிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சங்க சட்ட ஆலோசகர் கோபாலன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏ., பூமிநாதன், ம.தி.மு.க., நிர்வாகி சுப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ஜெயபாலன், அரிசி ஆலை அதிபர்கள் நிர்வாகிகள் அன்பரசன், ஜானகிராமன், கிஷோர், பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை சங்கத் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர்கள் வேல்முருகன், மலைச்சாமி, துணைத் தலைவர் திருப்பதி, பொருளாளர் ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement