வெவ்வேறு சம்பவத்தில் 5 பேர் மாயம்

ஓசூர்: ஊத்தங்கரையை சேர்ந்த, 18 வயது சிறுமி, திருப்பூர் மாவட்-டத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்-தினம் அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற சிறுமி மாயமானார். அவரது தந்தை ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரியம்பட்டியை சேர்ந்த முத்து மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


ஓசூர் அருகே பாகலுார் கோட்டை ஏரித்தெருவை சேர்ந்தவர் சுமித்ரா, 30. இவரது கணவர் கடந்த, 4 மாதங்களுக்கு முன் இறந்-ததால் விரக்தியிலிருந்தவர், கடந்த, 4 மாலை, தன், 8 வயது மக-ளுடன் வீட்டிலிருந்து மாயமானார். அவரது உறவினர் சங்கர், 35, புகார் படி, பாகலுார் போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர் அருகே எலசேப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசரெட்டி மகள் லிகிதா, 19. தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 6ம் தேதி ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றவர் மாய-மானார். அவரது தந்தை புகார் படி பாகலுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படிக்-கிறார். கடந்த, 3 மாலை, 4:10 மணிக்கு, கெலமங்கலம் பட்டா-ளம்மன் கோவில் தெருவிலுள்ள உறவினர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் கெலமங்-கலம் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த லோகேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்-டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement