கொள்ளையனின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

சேலம்: ஓமலுார், பொட்டியபுரம் அருகே கட்டிக்காரனுாரை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெண்ணிடம் நகை பறித்த வழக்கில், மகுடஞ்சாவடி போலீசார், கடந்த 25ல், நரேஷ்குமாரை, சங்ககிரி அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்-தனர்.

விசாரணையில் அவர், கொள்ளை, வழிப்பறி செய்த நகை-களை தாய், மனைவியிடம் கொடுத்திருப்பதாக கூறினார்.இதனால் கட்டிக்காரனுாரில் வசிக்கும் தாய் புஷ்பா, 54, சேலம், அரிசிபாளையத்தில் வசிக்கும் மனைவி வீணா, 23, ஆகியோர், மறுநாள் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்-டனர். நேற்று முன்தினம் மாலை, வீணாவுக்கு வயிற்றுவலி, காய்ச்சல் ஏற்பட்டது. சிறையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்-சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார்.

Advertisement