தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஒகேனக்கல்: ஒகேனக்கல், காவிரியாற்றில் தீயணைப்பு துறை சார்பில், தென்-மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.


ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அருகே நடந்த இந்நிகழ்ச்-சிக்கு, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி தலைமை வகித்தார். தென்-மேற்கு பருவமழையின் போது, ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அப்போது, இடர்பாடு-களில் சிக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது, பென்னாகரம் தாசில் தார் பிரசன்னமூர்த்தி, பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி மற்றும் ஒகேனக்கல் தீயணைப்புத்துறை வீரர்கள், வருவாய் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Advertisement