சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்-தது. இதில், தர்மபுரி நெசவாளர் காலனியிலுள்ள மஹாலிங்கேஸ்-வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூவேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அரூர் வர்-ணீஸ்வரர் கோவில், சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்த-மலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்-டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்-தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்-தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்-ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்து. சிறப்பு பூஜையில் பையர்நத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.