'என்னால் படிக்க முடியல' மாணவர் தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் காதக்கிணற்றைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளரின் 15 வயது மகன், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 'பாடங்கள் அதிகமாக இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை' என பெற்றோரிடம் கூறி வந்த நிலையில் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, அறையிலேயே படித்து அங்கேயே துாங்க ஆரம்பித்தார்.

நேற்றுமுன்தினம் பெற்றோர் கோயிலுக்கு சென்ற நிலையில் அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement