போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

சென்னை: போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட விவகாரத்தில், அங்கு சென்று பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமார் தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது என்பது அராஜகம் மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
'பா.ஜ., கூட்டணிக்கு விஜய், சீமான் அவசியம்' டில்லிக்கு தகவல் அனுப்பும் தமிழக நிர்வாகிகள்
-
மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!
-
கூட்டணி கட்சியினரை உள்ளடக்கி 'பூத்' கமிட்டி அமைக்கும் பா.ஜ.,
-
பா.ம.க.,வில் வலுக்கும் அப்பா - மகன் சண்டை; பொதுக்குழுவுக்கு ஆள் பிடிக்கும் அன்புமணி
-
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு